ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.

இந்தப் போரில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி கொடுக்க ஈரான் தேர்ந்தெடுத்த வழி – ஹார்முஸ் நீர்ச்சந்தி.

உலகின் பெரும்பான்மையான எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகத்தான் நடக்கிறது.

ஈரான் பிளான்

ஈரான் போர் தொடங்கியதும் ஹார்முஸை மூடிவிட்டது ஈரான்.

இந்த வழியை அடைத்தால் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், உலக நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்கும்… எண்ணெய் சந்தை பாதிப்படையும். இதனால், அமெரிக்காவிற்கும், இஸ்ரேலிற்கும் நெருக்கடி ஏற்படும் என்று பிளான் போட்டது ஈரான்.

இந்தப் பிளான் பெரும்பாலும் நடந்துவிட்டதுதான். ஆனாலும், ஈரான் போர் இன்னும் முடிந்தபாடில்லை.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

ஹார்முஸ் நீர்ச்சந்தி ஈரான் எல்லையில் விரிந்திருப்பது ஈரானுக்குச் சாதகமான ஒன்று.

அதனால், ஈரான் நினைத்த கப்பல்கள் அந்த வழியைக் கடக்கிறது. ஈரானின் தடையைத் தாண்டினால், அந்தக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால், பல மில்லியன் டன் எண்ணெய்கள் தாங்கிய கப்பல்கள் ஹார்முஸின் எல்லையில் காத்திருக்கின்றன.

தற்போது ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு மாற்றுப் பாதையாக மாறுவதற்கு சிரியா ஆர்வம் காட்டுகிறது. இது ஈராக்கில் இருந்து சாலை வழியாக எண்ணெய் எடுத்து செல்லும் போக்குவரத்து ஆகும்.

ட்ரம்ப் பேச்சு

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று, “சிரியாவில் இப்போது குழாய்வழிகள் தீவிரமாகக் கட்டப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால், சிரியா வழியிலான சாலைகள் அமைக்கப்பட்டு, ஏற்கனவே பயன்பாட்டிற்கும் வந்துவிட்டன.

எண்ணெய்யை ஏற்றிச் செல்லும் பிரமாண்டமான லாரிகள் சிரியா வழியாகத் தாராளமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. ஹார்முஸ் நீர்ச்சந்திக்கு மாற்றாகப் பல புதிய வழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

உண்மையைச் சொன்னால், ஹார்முஸ் நீர்ச்சந்தி முன்பு போல இப்போது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை” என்று பேசியிருக்கிறார்.

More in TamilNews
MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ September 6, 2026 “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? September 6, 2026 நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் September 6, 2026 இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி September 6, 2026 சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் September 6, 2026 புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் September 6, 2026

See all 793 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *