சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் பற்றி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, ‘26.08.2026 அன்று நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அங்கிருக்கும் தமிழர்களை மீட்கும்பணிகளில் இறங்கினோம். 27.08.2026 அன்று முதல்வருடன் அவசர ஆலோசனை நடத்திவிட்டு தமிழக அமைச்சர்கள் குழு டெல்லி சென்றது.

அங்கே மீட்புப் பணிக்கான உதவி மையங்களும் அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு டெல்லி இல்லத்தின் ஆணையர் ஆஷிஸ் மிஸ்ரா காத்மண்டுவுக்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியாக அனுப்பி வைக்கப்பட்டார். தமிழக அமைச்சர்கள் குழு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஷ்ரியை சந்தித்து மீட்புப் பணிகள் குறித்து ஆலோசித்தது. முதற்கட்டமாக 21 தமிழர்கள் நேபாளத்திலிருந்து மீட்டு வரப்பட்டனர். அவர்களுக்கான பயண செலவை அரசே ஏற்றது.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

305 தமிழர்கள் கைலாஷ் யாத்திரைக்கு சென்றது அறியப்பட்டது. அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக உள்ளனர். 84 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. கும்பகோணம் நிறுவனம் மூலம் 57 பேர் நேபாளம் சென்றனர். அவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். குரோம்பேட்டை சேர்ந்த நிறுவனம் மூலம் 49 பேர் நேபாளம் சென்றிருந்தனர். இவர்களை தொடர்புகொள்ள தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளம் சென்றவர்களின் உறவினர்கள் நேபாளம் செல்ல விரும்பினால் அரசே ஏற்பாடுகளை செய்துகொடுக்கும். மீட்புப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.’ என்றார்.

More in TamilNews
MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ September 6, 2026 “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? September 6, 2026 நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் September 6, 2026 இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி September 6, 2026 சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் September 6, 2026 புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் September 6, 2026

See all 768 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *