தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முந்தைய ஆட்சியாளர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் சில விவசாயிகள் மீது பிரயோகிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தால் விவசாய நிலங்களும் நீர்நிலைகளும் பாதிக்கப்படும் எனக் கூறி போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டு, நிலுவையில் இருக்கும் வழக்குகளும் கைவிடப்படுகின்றன.
அமைதியான வழிப் போராட்டங்களை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நாட்டின் ஜனநாயக உரிமைகளை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது. மேலும், சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை இது வலுப்படுத்தும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.”
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும்
September 7, 2026
SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
September 7, 2026
Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்
September 7, 2026
Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம்
September 7, 2026
உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம்
September 7, 2026
கரண்ட் பில் திடீரென டபுள் மடங்கா? இனி உடனே கட்ட வேண்டாம்.. 3 நாளில் ஆய்வு: தமிழக மின்சார வாரியம்
September 7, 2026
ஆபாச ஏஐக்கு ஆப்பு வைத்த ஸ்ருதிஹாசன்.. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. என்ன ஆச்சு?
September 7, 2026
Ensure grounds of arrest are furnished before remand, Madras High Court tells T.N. DGP, Chennai Police Commissioner
September 7, 2026
Youth killed in accident involving Tamil Nadu Minister Jagadeshwari’s car near Chennai
September 7, 2026
உங்கள் ஆதாரை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பெறப்பட்டுள்ளன? 2 நிமிடத்தில் தெரிந்து கொள்ளலாம்!
September 7, 2026
ரெடியான ஈரான்.. ஹார்முஸ் நீரிணையில் புது ரூட்.. தடை செய்யப்பட்ட பகுதியை அறிவிக்கும் மொஹ்சென் ரெசாயி!
September 7, 2026
Gold Rate: வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்..!! குறைந்தது தங்கம் விலை..!!
September 7, 2026