நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த கயாடு லோஹர், “நான் புகைப்படம் எடுத்த அன்று வேறு இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

கயாடு லோஹர்
கயாடு லோஹர்

இரண்டு ஆண்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தது எனக்கு அசௌகரியமாக இருந்தது. அதனால் என் சீட்டை மாற்றினேன்.

அப்போதுதான் ரஜினி சாரைப் பார்த்தேன். விமானம் தரையிறங்கியதும் அஷ்வத்துக்கு ஃபோன் செய்தேன்.

அப்போது அவர் தர்மன் ஷூட்டிங்கில் இருந்தார். அவரிடம் நான், ரஜினிசாரிடம் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள் என்றேன்.

அதற்கு அவர் ‘நீங்கள் போய் பேசுங்கள். ஒரு வேளை அவருக்கே உங்களைத் தெரிந்திருக்கலாம்’ என்றார்.

பிறகு ரஜினி சார் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்று, ‘நான் ‘டிராகன்’ பட நடிகை’ என அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

 கயாடு லோஹர்
கயாடு லோஹர்

அவர் ‘நீங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறீர்கள்’ என்றார். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

பிறகு அவரே என்னிடம் ஃபோட்டோ சரியாக வந்திருக்கிறதா? என்று கேட்டார்” எனப் பகிர்ந்திருக்கிறார் கயாடு லோஹர்.

More in Cinema

See all 173 in Cinema →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *